×

வேலூரில் செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாமூல் கேட்ட விஜயகுமார் தவெகவில் இருந்து நீக்கம்!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் செங்கல்சூளை உரிமையாளர்களிடம் தவெக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் ரூ.1 லட்சம் மாமூல் கேட்டார். மாமூல் கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் செங்கல்சூளைகளை இழுத்து மூடுவோம் என்று மிரட்டினார். இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் விஜயகுமாரிடம் இருந்து பதவியை பறித்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிரடியாக நீக்கியுள்ளது.

சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வென்று ஆட்சியை பிடித்துவிட்டது. விஜய் முதல்வரானது முதல் தவெகவினர் ஆங்காங்கே அட்டூழியம் செய்து வருகின்றனர். மருத்துவமனைகள், அரசு அலுவலகங்களில் தவெக நிர்வாகிகள் ஆய்வு மேற்கொண்டுஅதிகாரிகளிடம் கேள்வி கேட்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தான் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தவெக நிர்வாகி செய்த செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டசபை தொகுதிக்கு ஊட்டப்பட்ட கணியம்பாடி ஒன்றியத்தின் தவெக செயலாளராக விஜயகுமார் இருந்தார். இவர் தனது ஆதரவாளர்களுடன் சென்று கணியம்பாடி புதூரில் இயங்கி வரும் சண்முகம், தினகரன், சுனில்குமார், ரமேஷ், சுமன் ஆகியோரின் செங்கல்சூளைகளில் புகுந்து மாதம் ரூ. 1 லட்சம் கொடுக்காவிட்டால் சூளைகளை இழுத்து மூடுவோம் என மாமூல் கேட்டு மிரட்டினார்.

இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் சென்று சமாதானம் செய்தனர். இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்சூளை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தாலுகா போலீசாரிடம் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கணியம்பாடி பஸ் நிறுத்தம் அருகே வேலூர் மற்றும் திருவண்ணாமலை பிரதான சாலையில் சாலை மறியல் நடந்தது. தவெக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யவும், கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர்கள் வலிறுத்தினர்.

இந்நிலையில் தான் கணியம்பாடி தவெக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தவெகவின் பொறுப்பு அதிரடியாக பறிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்;

“ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் ஆற்காடு சட்டசமன்ற தொகுதிக்கு உட்பட்ட கணியம்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வந்த டி விஜயகுமார் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டார்.

இதனால் அவர் வகித்து வந்த ஒன்றிய செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Vijayakumar Taweka ,Mamool ,Vellore ,RANIPETTA ,UNION SECRETARY ,VIJAYAKUMAR ,
× RELATED லாரி மோதி படுகாயம் அடைந்த உணவக...