×

தமிழ்நாட்டில் அனைத்து வகுப்புகளும் கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 4 ஆம் தேதி திறப்பு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து வகுப்புகளும் கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 4 ஆம் தேதி திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, ஏற்கெனவே திட்டமிட்டடிருந்தபடி 4 முதல் 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படாது. முன்னதாக, தமிழகத்தில் நிகழாண்டு ஏப். 23-இல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றதால் அதற்கு முன்னதாக மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்தி விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து 1 முதல் 9-ஆம் வரையிலான வகுப்புகளுக்கு ஏப். 17-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.

இந்த நிலையில், வெயில் தாக்கத்தின் நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையத்திடம் அறிக்கை கேட்கப்பட்டு அந்த அறிக்கையின் அடிப்படையில் முதல்வரிடம் கலந்து பேசி பள்ளிகள் திறப்பு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-இல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு இன்று மாலை அறிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Tamil Nadu government ,Chennai ,
× RELATED மின்னல் தாக்கி 3 பெண்கள் பலி