×

புழல் அடுத்த காவாங்கரையில் ஒரே வளாகத்தில் 2 அரசு பள்ளிகள் இட நெருக்கடியால் மாணவர்கள் அவதி

புழல்: சென்னை மாதவரம் மண்டலம் 23வது வார்டுக்கு உட்பட்ட புழல் அடுத்த காவாங்கரை கண்ணப்பசாமி நகரில் மாநகராட்சி துவக்கப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த இரண்டு பள்ளிகளிலும் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். போதுமான இட வசதி இல்லாததால் மாநகராட்சி துவக்கப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் 2 பள்ளி மாணவர்களும் ஒரே வளாகத்தில் படித்துவருவதால் பாடம் படிக்கும்போது பல்வேறு தொல்லைகள் ஏற்படுகிறது. மேலும் விளையாட்டு திடல் இல்லாததால் பல்வேறு விளையாட்டுகளில் பயிற்சி மாணவர்களுக்கு அளிப்பது தடையாக உள்ளது.

தற்போது உயர்நிலைப்பள்ளியில் படித்துவரும் ஒரு வகுப்பு குறிப்பாக மாணவர்கள் 500 மீட்டர் தூரம் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பல்நோக்கு மைய கட்டிடத்தில் மாணவர்களை அமரவைத்து பாடம் நடத்தி வருகின்றனர். எனவே இரண்டு பள்ளிகளையும் தனித்தனியாக பிரித்து தற்போதுஉள்ள இடத்தை மாநகராட்சி துவக்க பள்ளிக்கும் அருகில் உள்ள சென்னை குடிநீர் வடிகால் வாரியத்துக்கு சொந்தமான இடம் காலியாக உள்ளதால் அந்த இடத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைக்கவேண்டும் மக்கள் பலஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை பொதுமக்களும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும் பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழு நிர்வாகிகளும் சம்பந்தப்பட்ட கல்வித்துறையினருக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.

‘ஜூன் மாதம் பள்ளி துவங்கஉள்ளதால் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு என காலியாக உள்ள சென்னை குடிநீர் வடிகால் வாரியம் துறைக்கு சொந்தமான இடத்தில் இட ஒதுக்கீடு செய்து புதிதாக வகுப்பறை மற்றும் ஆசிரியர்கள் அறை கட்டவேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Maghal ,Municipal Inaugural School and ,Government High School ,Kannapasamy city ,Kavankarai ,Ward ,Chennai Madhavaram Zone ,
× RELATED நரிக்குறவர்களுக்கு அடையாள அட்டை: திருவள்ளூர் கலெக்டர் வழங்கினார்