திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்கின்றனர். அதன்படி, வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 30ம் தேதி பகல் 12.50 மணிக்கு தொடங்கி, 31ம் தேதி பகல் 2.41 மணிக்கு நிறைவடைகிறது. எனவே இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்தது என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.கோடை விடுமுறையால் அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
