எண்ணெய் நிறுவனங்களின் இழப்பு ரூ.600 கோடியாக குறைந்தது: ஒன்றிய அரசு தகவல்

 

புதுடெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் எண்ணெய் நிறுவனங்களின் இழப்பானது நாள் ஒன்றுக்கு ரூ.600கோடியாக குறைந்துள்ளதாக இயற்கை மற்றும் எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களுக்குள்ளாகவே பெட்ரோல், டீசல் விலையானது 4வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் ஒரு லிட்டருக்கு ரூ.7.5உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து இயற்கை மற்றும் எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா கூறுகையில்,‘‘மே 15ம் தேதி தொடங்கிய விலை திருத்தச் சுழற்சிக்கு முன்னதாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விற்பனையில் ஏற்பட்ட இழப்புகள் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.1000கோடியாக இருந்தது.

அந்த இழப்புத்தொகையானது தற்போது நாளொன்றுக்கு ரூ.600கோடிக்கும் குறைவாக குறைந்துள்ளது. இந்த இழப்புக்களில் சமையல் எரிவாயு விற்பனை மூலம் ஏற்படும் இழப்புகளும் அடங்கும். வீடுகளுக்கு விற்பனை செய்யப்படும் சமையல் எரிவாயு ஒரு மானியப் பொருளாகும். இதன் உற்பத்தி செலவுக்கும் சில்லறை விற்பனை விலைக்கும் இடையிலான வித்தியாசத்தை அரசே ஈடு செய்கிறது”என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: