ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர முயன்றவர் கைது

 

திருமலை: உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத்தை சேர்ந்தவர் ஜைத்கான்(26). இவர் தெலங்கானா மாநிலம், மேட்சலில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்துள்ள இவர், பயங்கரவாத அமைப்புகளின் வலைதள கணக்குகளை பின்தொடர்ந்து வந்துள்ளார். அதில் தீவிரவாதம் ெதாடர்பான கருத்துகளை பதிவிட்டும், பதில் அளித்தும் வந்துள்ளார்.

இந்த பதிவுகளை கண்டறிந்த போலீசார், இவரை தொடர்ந்து கண்காணித்தனர். அப்போது, இவரது சமூக வலைதள கணக்குகளை ஆய்வு செய்தபோது, ஜைத்கான் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர முயன்றது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த போலி துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

Related Stories: