அவிநாசி, மே 25: அவிநாசி அருகே ஜல்லி கற்கள் கடத்திய லாரியை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். அவிநாசி அருகே சேவூர் புளியம்பட்டி சாலையில் ஜல்லி கற்கள் கடத்துவதாக சுரங்கம் மற்றும் கனிமவளத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய அனுமதியின்றி ஜல்லி கற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில், சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜல்லி கற்களுடன், லாரியை பறிமுதல் செய்தனர்.
