திருப்பூர், மே 23: பல்லடம் அடுத்த ஆண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து. இவரது மனைவி அன்னபூரணி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அன்னபூரணி அதே பகுதியில் செயல்பட்டு வரும் பாலி பேக்கிங் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஜனவரி மாதம் பணியில் இருந்த போது இயந்திரத்தில் சிக்கி இவரது வலது கை துண்டானது. இதன் காரணமாக பெரும் சிரமத்தில் தவித்து வந்த அன்னபூரணி, கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது ஆண்டிபாளையம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டிருந்த திமுக வேட்பாளர் செல்வராஜிடம் தனது நிலையை எடுத்து கூறி தனக்கு உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
