மது விற்ற வாலிபர் கைது

லாலாப்பேட்டை, ஆக. 1: லாலாப்பேட்டை அருகே வேங்காம்பட்டியில் மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 35 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கரூர் மாவட்டம் லாலாபேட்டை காவல் நிலையத்திற்க்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோத மது விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது லாலாபேட்டை அருகே வேங்காம்பட்டியில் கார்த்தி (31) என்பவர் வீட்டின் பின்புறம் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனை கண்ட போலீசார் அவரை கைது செய்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 35 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

 

Related Stories: