கூரை வீடு தீப்பிடித்து சேதம்

பண்ருட்டி, மே 23: பண்ருட்டி அருகே உள்ள கொக்குபாளையம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் யாசகம். இவரது மகன் கங்காதுரை (40). இவரது கூரை வீடு நேற்று மின் கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் வேல்முருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இதில் மேற்கூரை மற்றும் மின்சாதன பொருட்கள் தீயில் எரிந்து சாம்பல் ஆனது.

 

Related Stories: