×

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் பணி

 

புதுக்கோட்டை, மே.22: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு பணிக்கு தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் அருணா தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் செயல்பட்டுவரும், வட்டார இயக்க மேலாண்மை அலகில் சுய உதவிக் குழுக்கள் மற்றும் வங்கிகளுக்கிடையே இணைப்புப் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளராக பணியாற்ற தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Tags : Pudukkottai District ,Pudukkottai ,Aruna ,Pudukkottai District, Tamil Nadu… ,
× RELATED அரசு குடியிருப்பில் 10 கிலோ பதுக்கல்;...