×

அன்னவாசல் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து

 

இலுப்பூர்,மே. 22 : அன்னவாசல் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி விபத்தில் ஒருவர் காயம் அடைந்தார். புதுக்கோட்டை அருகே உள்ள ராயபுரம் பகுதி சேர்ந்தவர் பழனியப்பன்(54). இவர் நேற்று மதியம் தனது காரில் சொந்த ஊரான ராயபுரத்தில் இருந்து விராலிமலைக்கு சென்றுள்ளார். காரை இவரே ஓட்டி வந்துள்ளார். கார் புதுக்கோட்டை விராலிமலை சாலை சொக்கநாதன் பட்டி அருகே சென்றபோது கார்நிலை தடுமாறி எதிரே வந்த அரசு பஸ் மீது மோதியது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்து அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரை ஒட்டி வந்த பழனியப்பன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். சம்பவ இடத்துக்கு விரைந்த அன்னவாசல் காவல் துறையினர் காரில் சிக்கி இருந்த இவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக அன்னவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Annavasal ,Ilupur ,Palaniappan ,Royapuram ,Pudukkottai ,
× RELATED அரசு குடியிருப்பில் 10 கிலோ பதுக்கல்;...