சின்னமனூர், மே 22: சின்னமனூரில் பல்வேறு பகுதி கடைகளில் உணவுப்பொருட்கள், பழங்கள் திறந்த வெளியில் வைத்து விற்கப்படுகின்றன. ‘ஈ’ மொய்த்த அவற்றை உண்போருக்கு உடல்நலக்கோளாறு ஏற்படுகிறது. எனவே இது தொடர்பாக உணவு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சின்னமனூரில் முக்கியமான ரோடுகளில் உள்ள கடைகளில் ‘ஈ’ தொல்லை அதிகம் உள்ளது. பழக்கடைகள், குளிர்பானக்கடைகள், இனிப்பகங்கள், ஓட்டல்கள் என அனைத்து இடங்களிலும் ஈ ஆதிக்கம் நிறைந்திருக்கிறது.ரோட்டோர ஆக்கிரமிப்பு கடைகளில், ‘ஈ’ மொய்க்கும், தூசி கலந்த உணவுபொருட்கள் விற்பனை நடக்கின்றன. அதை உண்போருக்கு உடல்நலக்குறைபாடு ஏற்படுகிறது. உணவுப்பொருட்களை ‘ஈ’ மொய்க்காதவாறு சுகாதாரமான முறையில் விற்பனை செய்ய அனைத்துப்பகுதிகளிலும் சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்புதுறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மீறுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
