×

உடல்நலம் பாதிக்கப்பட்டதால் விபரீத முடிவு? மகனை நெஞ்சோடு அணைத்தபடி கிணற்றில் குதித்து தாய் தற்கொலை: விழுப்புரம் அருகே பரிதாபம்

திருக்கோவிலூர்: விழுப்புரம் அருகே மகனை நெஞ்சோடு அணைத்தப்படி கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருப்பது பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அடுத்த வெள்ளம்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி தமிழ்மொழி (25). இவர்களுக்கு பிரதீப் (5) என்ற மகன் உள்ளார். சில தினங்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்ட தமிழ்மொழி, தனது கணவரிடம் கூறிவந்துள்ளார். நேற்றுமுன்தினம் மாலை வேலை முடிந்து வீடு திரும்பிய கார்த்திக், மனைவி மற்றும் குழந்தையை வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அரகண்டநல்லூர் போலீசில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அதே கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரது நிலத்தில் உள்ள கிணற்றில், மகனை துண்டால் தனது இடுப்பில் கட்டிக்கொண்டு கையால் அணைத்தபடி தமிழ்மொழியின் உடல் மிதப்பது தெரியவந்தது. இதையடுத்து உறவினர்கள் சென்று பார்த்ததும் தமிழ்மொழியும் அவரது குழந்தையும் என்பதும் அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தனர். இதன்பிறகு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் தாய், மகனின் உடல் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags : Viluppuram ,Thirukovilur ,Karthik ,Velambutur ,Viluppuram district ,Arkhandnallur ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...