- சேதுப்பட்டு
- முருகன்
- பரிதிபுரம் கிராமம்
- மேல்மலையனூர் தாலுகா, விழுப்புரம் மாவட்டம்
- சேத்துப்பட்டு அரசு மருத்துவமனை
சேத்துப்பட்டு, மே 22: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் தாலுகா, பரிதிபுரம் கிராமத்தை சேர்ந்த முருகன் (56), நேற்று சிகிச்சைக்காக சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தார். அப்போது அவர் வைத்திருந்த 4 சவரன் தங்க நகை தவறவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சேத்துப்பட்டு போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, சேத்துப்பட்டு அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த குணசீலன் என்ற இளைஞர், மருத்துவமனையில் கீழே கிடந்த 4 சவரன் நகையை போலீசாரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து, போலீசார் நகையை உரியவரான முருகனிடம் ஒப்படைத்தனர். நேர்மையாக நகையை ஒப்படைத்த குணசீலனை போலீசார் பாராட்டினர்.
