×

சேத்துப்பட்டில் கீழே கிடந்த 4 சவரன் போலீசில் ஒப்படைப்பு: இளைஞருக்கு பாராட்டு

 

 

சேத்துப்பட்டு, மே 22: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் தாலுகா, பரிதிபுரம் கிராமத்தை சேர்ந்த முருகன் (56), நேற்று சிகிச்சைக்காக சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தார். அப்போது அவர் வைத்திருந்த 4 சவரன் தங்க நகை தவறவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சேத்துப்பட்டு போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, சேத்துப்பட்டு அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த குணசீலன் என்ற இளைஞர், மருத்துவமனையில் கீழே கிடந்த 4 சவரன் நகையை போலீசாரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து, போலீசார் நகையை உரியவரான முருகனிடம் ஒப்படைத்தனர். நேர்மையாக நகையை ஒப்படைத்த குணசீலனை போலீசார் பாராட்டினர்.

 

Tags : Sethupattu ,Murugan ,Parithipuram village ,Melmalaiyanur taluka, Villupuram district ,Sethupattu Government Hospital ,
× RELATED ஆரணி அடுத்த சிறுமூர் கிராமத்தில்...