- வேதாரண்யம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்
- மாநில ஒருங்கிணைப்பாளர்
- பார்த்தசாரதி
- தமிழ்நாடு…
வேதாரண்யம், மே 20: தமிழக விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் முதல்வரால் அறிவிக்கப்பட்ட தமிழ்நாட்டில் உள்ள வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் உழவர்களுடைய வேளாண் கடன்கள் தள்ளுபடி குறித்து 31-3-2026 வரை கடன் பெற்றுள்ள உழவர்களின் முழுமையான கடன் விபர பட்டியல்களை உடனே சேகரிக்கும்படி உத்தரவிட்டிருக்கின்ற முதலமைச்சருக்கு தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மகிழ்ச்சியை பாராட்டுகளை நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
