- தூத்துக்குடி துப்பாக்கி நினைவு தினம்
- கீதஜேவன்
- திமுகவிநர்
- தூத்துக்குடி
- முன்னாள் அமைச்சர்
- மாவட்ட செயலாளர்
- வடக்கு மாவட்டம்
- திமுக கைதஜேவன்
- தூத்துக்குடி
- எதிர்ப்பு
தூத்துக்குடி, மே 23: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் 8ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, வடக்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் அஞ்சலி செலுத்தினார். தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் 8வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கீதாஜீவன், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்ச்சிக்கு மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மாநகர துணை செயலாளர் கீதா முருகேசன், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட அணி தலைவர் அருண்குமார், மாநகர அணி அமைப்பாளர்கள் அருண்குமார், முருகஇசக்கி, பகுதி செயலாளர்கள் நிர்மல்ராஜ், சுரேஷ்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் மேயர் ஜெகன்பெரியசாமி பங்கேற்று துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்க தலைவர் மருதப் பெருமாள், திமுக வட்ட செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
