கீழ்வேளூர், மே 19: கீழ்வேளூர் அருகே தேவூர் கடை தெருவில் சென்டர் மீடியன் அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறையினர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
போக்குவரத்தில் சாலை போக்குவரத்து என்பது முக்கிய இடம் வகிக்கிறது. சாலைகளில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, உள்ளாட்சிகளால் நிர்வகிக்கப்படும் உள்ளூர் கிராம சாலைகள் என உள்ளது. இதில் தேசிய நெடுஞ்சாலைக்கு அடுத்ததாக மாநிலநெடுஞ்சாலைகள் அந்தந்த மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மாநில நெடுஞ்சாலைகள் இருவழிச்சாலைகள் தற்போது 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
