கீழ்வேளூர், மே 19: இலுப்பூர் திரவுபதி அம்மன் கோயிலில் புதிதாக நிறுவப்பட்ட கொடி மரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த இலுப்பூர் திரௌபதி அம்மன் கோயிலில் செப்புத் தகடுகள் கொண்டு புதிதாக செய்யப்பட்ட கொடிமர மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்றுமுன்தினம் இரவு அனுக்ஞை பூஜை மற்றும் வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்து முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை முடிவு பெற்று பூர்ணஹூதி நடைபெற்றது.
