கீழ்வேளூர், மே 19: பொன்னி சித்திரக் கடல் ஓவிய பயிற்சி மையத்தில் ஓவிய பயிற்சி பெறுவதற்கு நுழைவு தேர்வு நடைபெற உள்ளதால் ஓவியம் கற்றுக் கொள்ள ஆர்வமுள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம் என நாகை கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவரின் முன்னெடுப்பில் செயல்பட்டு வரும் மாவட்ட கல்வி தன்முனைப்பு திட்டத்தின் கீழ் செயல்படும் பொன்னி சித்திர கடல் ஓவிய பயிற்சி மையத்தில் இலவசமாக ஓவிய பயிற்சி பெறுவதற்கான நுழைவு தேர்வு நடைபெற உள்ளது.
