புவனகிரி, மே 18: கிள்ளை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவி, ராஜா மற்றும் போலீசார் கிள்ளையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக வந்த ஒரு பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். பைக்கை ஓட்டி வந்த வாலிபர் ஒரு டிராவல் பேக்கில் 100 மது பாட்டில்கள் வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். இவை அனைத்தும் புதுச்சேரி மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்டது என தெரிய வந்தது.
பின்னர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், கிள்ளை தைக்கால் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார்(24) என்பது தெரிய வந்தது. இதையடுத்து பைக்கையும், மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து, ராஜேஷ்குமார் மீது கிள்ளை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
