×

திருமருகல் அருகே பெரியநாயகி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

கீழ்வேளூர், மே18: நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜபுரத்தில் பெத்தார்ண சுவாமி, பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. திருவிழாவையொட்டி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன், திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் பெத்தார்ண சுவாமி, பெரியநாயகி அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து இரவு வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது. காலை அக்னி கப்பரை வீதியுலா நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெத்தார்ண சுவாமி, பெரியநாயகி அம்மனை வழிபட்டனர்.

 

Tags : Chithirai festival ,Periyanayaki Amman ,Thirumarugal ,Kilvelur ,Kothandarajapuram, Katumavadi ,Nagapattinam district ,
× RELATED வேலூர் செங்கல்சூளைகளில் மாமூல் கேட்டு தவெக நிர்வாகிகள் மிரட்டல்