×

சாராயம் காய்ச்சி விற்ற கணவன், மனைவி கைது: 650 லிட்டர் ஊறல் அழிப்பு

 

தண்டராம்பட்டு, மே 18: தண்டராம்பட்டு அருகே சாராயம் காய்ச்சி விற்ற கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த கண்டியாங்குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதாக தச்சம்பட்டு போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிரமாக கண்காணித்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஓடை பகுதியில் 6 பேரல்களில் 650 லிட்டர் ஊறல் மற்றும் 20 லிட்டர் சாராயம் காய்ச்சி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 650 லிட்டர் ஊறலை கீழே ஊற்றி அழித்த போலீசார், 20 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினர்.

Tags : Thandarambattu ,Thachampattu ,Kandiyankuppam ,Tiruvannamalai district ,
× RELATED திருவண்ணாமலை மாநகராட்சி நகர்புற...