கரூர், மே 18: கரூர் ஐந்து ரோடு அருகே பேரு்ந்து நிறுத்தத்தை மறைத்து பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் தவெக சார்பில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் அந்த கட்சியினர் நிழற்குடைகளை மறைத்தே பிளக்ஸ் போர்டு வைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இதனை வலியுறுத்தும் வகையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து ரோடு பகுதியிலும் பேருந்து நிறுத்த பகுதியில் உள்ள நிழற்குடையை மறைத்து இந்த கட்சியின் சார்பில் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு தரப்பினர்களும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை பார்வையிட்டு தடுத்து நிறுத்திட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கி்னறனர்.
