×

ஆமைவேகத்தில் நடைபெறும் உயர்மட்ட பாலப்பணிகள்

 

கரூர், மே 20: கரூர் மாவட்டம் புலியூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புலியூர் சந்திப்பு சாலை பிரியும் இடமான வீரராக்கியம் அருகே வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி சில மாதங்களுக்கு முன்பு உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது. விரைந்து பணிகள் முடிக்கப்படாத காரணத்தினால் இரண்டு புறமும் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனனத்து வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

Tags : Karur ,National Highway ,Puliyur ,Veerarakiyam ,Karur-Trichy National Highway… ,
× RELATED மின் வெட்டால் பொதுமக்கள் அவதி