×

கொசு ஒழிப்பு மருந்து தெளிக்க வலியுறுத்தல்

 

கரூர், மே 20: கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. நான்கு மண்டலங்களாக பிரித்து பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், தாந்தோணிமலை, சணப்பிரட்டி, ராயனனூர், இனாம்கரூர், பசுபதிபாளையம் போன்ற பல்வேறு பகுதிகளில் புறநகர்ப்பகுதிகள் அதிகளவு உள்ளன. வடகிழக்கு பருவமழை முடிவடைந்து தற்போது கோடைக்காலம் துவங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை சீசன் போது பெய்த மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகி பொதுமக்களை பல்வேறு சிரமத்துக்கு உள்ளாக்கி வருகிறது. மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் தற்போது கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதே போல், மாநகராட்சிக்குட்பட்ட புறநகர்ப்பகுதிகளிலும் கொசு ஒழிப்பு பணிகளான கொசு மருந்து தெளிப்பது, வீடுகள் தோறும் அபேட் மருந்து வழங்குவது போன்ற பணிகளை பணியாளர்கள் மூலம் தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags : Karur ,Karur Corporation ,Thanthonimalai ,Chanapritti ,Rayananur ,Inamkarur ,Pasupathipalayam ,
× RELATED லாலாபேட்டை அருகே பஞ்சப்பட்டி...