எபோலா வைரஸ் பரவலை தொடர்ந்து காங்கோ, உகாண்டாவில் சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கொடிய ‘எபோலா’ வைரஸ் நோய் மீண்டும் மிக அதிவேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. ருவாண்டாவின் இடுரி மாகாணத்தில் எபோலா தொற்று காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு மாகாணத்தில் கடந்த சில வாரங்களாகப் பரவி வரும் இந்த எபோலா வைரஸ் நோய்க்கு, இதுவரை ஒட்டுமொத்தமாக 80 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் எபோலா வைரஸ் அறிகுறி உள்ள நூற்றுக்கணக்கானோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களை சுகாதாரத் துறை அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். எபோலா தொற்று என்பது உடல் திரவங்கள் வழியாக மனிதா்களிடையே மிக வேகமாகப் பரவக்கூடிய ஒரு கொடிய நோயாகும். சிகிச்சை அளிக்கத் தவறினால், உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது.
காங்கோவை ஒட்டி அமைந்துள்ள உகாண்டா, தெற்கு சூடான் போன்ற நாடுகள் இதனுடன் நெருங்கிய போக்குவரத்துத் தொடர்பைக் கொண்டிருப்பதால், இந்த நோய் எல்லை தாண்டி பரவக் கூடும் என்ற அச்சமும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் காங்கோ, உகாண்டாவில் சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
