ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை இப்போது இல்லை: அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேட்டி

 

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அமைச்சர் நிர்மல் குமார் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இது பழைய ஆட்சி கிடையாது. முதல்வர் ஒவ்வொரு நிமிடமும் எதை நினைத்து செயல்படுகிறாரோ; அதை நினைத்து அனைவரும் செயல்பட வேண்டும். மக்களும் ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். இன்னும் 2, 3 மாதத்தில் எல்லாம் சீராகி நல்ல முறையில் செல்லும்; சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது. யாருக்கு எந்த துறை ஒதுக்கலாம் என முதல்வர் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து வருகிறார். 40, 50 ஆண்டுகளாக நடந்த நிர்வாகத்தை ஒரே நாளில் சரி செய்ய முடியாது. அதற்கு முழு ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.

இது மிகப்பெரிய பணி. அதன் நிலைமை குறித்து ஆய்வு செய்தால் தான் தெரியும். அதைத்தான் முதல்வர் முதல் நாளில் இருந்து செய்து வருகிறார்’ என்றார். அப்போது, ‘ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை எப்போது வழங்குவீர்கள்? என்ற கேள்விக்கு, ‘நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த பிறகு தான் முடிவு செய்ய முடியும். அதற்குள் முதல்வர் நிதி ஆதாரங்களை சரி செய்வார்’ என்றார். முதல்வர் எப்போது செய்தியாளர்களை சந்திப்பார் என்ற கேள்விக்கு, ‘முதல்வர் விஜய் தேவையான நேரத்தில் செய்தியாளர்களை சந்திப்பார். செய்தியாளர்களை சந்திக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. பெஞ்ச் மார்க்கும் கிடையாது’ என்றார்.

தமிழக வெற்றிக் கழகம் திராவிட கட்சிகளின் நீட்சியா? என்ற கேள்விக்கு, ‘மக்களுக்கு தேவையான அனைத்தும் வெளிப்படையாக நடந்து வருகிறது. ஒரு சட்டமன்றத்தில் எத்தனை இளைஞர்கள், பெண்கள் அமர்ந்துள்ளனர் என்று பார்க்க வேண்டும். அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் நினைத்ததை முதல்வர் செய்து கொண்டிருக்கிறார். இது எந்த வெர்ஷனும் கிடையாது; இது புது வெர்ஷன்’ என்றார். ஜோசியர் கூறியதால் முதல்வர் கோட் சூட் அணிந்துள்ளாரா என்ற கேள்விக்கு, ‘அது தலைவரின் முடிவு. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: