புதுடெல்லி: தங்கம் உள்ளிட்ட விலைமதிப்புள்ள உலோகங்கள் மீது அதிக சுங்க வரிகளை விதித்த சில நாட்களிலேயே நேற்று வெள்ளி இறக்குமதிக்கு ஒன்றிய அரசு கட்டுப்பாடுகளை விதித்தது.கடந்த மே 13 அன்று, விலைமதிப்புள்ள உலோகங்கள் மீதான இறக்குமதி வரியை அரசு 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியது.
இந்த நிலையில் தங்கம் மற்றும் பிளாட்டினத்துடன் கலந்த வெள்ளி உட்பட, வெள்ளிக்கான இறக்குமதிக் கொள்கை தடையற்ற நிலையிலிருந்து கட்டுப்படுத்தப்பட்ட நிலைக்கு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் திருத்தப்பட்டுள்ளது என்று வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது. அந்த அடிப்படையில் வெள்ளி இறக்குமதிக்கு இனிமேல் அரசு அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
