பிரதமரின் அழைப்பை ஏற்று குதிரை வண்டிக்கு மாறிய காஷ்மீர் அமைச்சர்: சைக்கிளில் ஐகோர்ட்டுக்கு சென்ற நீதிபதி

ஸ்ரீநகர்: மேற்காசிய போர் பதற்றத்தால் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே 11ம் தேதி அன்று குடிமக்களை வலியுறுத்தினார். அந்நியச் செலாவணியைச் சேமிப்பதற்காக பெட்ரோல் மற்றும் டீசல் நுகர்வைக் குறைத்தல், நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகளைப் பயன்படுத்துதல், வாகனங்களைப் பகிர்ந்துகொள்ளுதல் (கார் பூலிங்), மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்தல் மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்தல் ஆகியவற்றை பிரதமர் பரிந்துரைத்தார்.

இந்த நிலையில் காஷ்மீர் உணவு, பொது விநியோகம், போக்குவரத்துத் துறை அமைச்சர் சதீஷ் சர்மா, தனது அதிகாரபூர்வ காருக்கு பதிலாக குதிரை வண்டியில் நேற்று பயணம் செய்தார். ஸ்ரீநகரில் உள்ள குப்கர் சாலை வழியாக பாரம்பரிய குதிரை வண்டியில் அமைச்சர் பயணம் செய்தது அமைச்சரின் முகநூல் கணக்கில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இதேபோல், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி சமீர் ஜெயின் சனிக்கிழமையன்று தனது வீட்டில் இருந்து உயர் நீதிமன்றத்துக்கு சைக்கிளில் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: