திருமலை: கோடை விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அதிகளவு பக்தர்கள் திரண்டுள்ளனர். இந்நிலையில் சனிக்கிழமையான நேற்றும் அதிகாலை முதல் அதிகளவு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய திரண்டனர்.
இதனால் வைகுண்டம் காத்திருப்பு அறைகள் முழுவதும் நிரம்பிய நிலையில், பக்தர்கள் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள சிலா தோரணம் வரை வரிசையில் காத்திருந்தனர். இவர்கள் சுவாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் ஆனது. ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்திலும், நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 6 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.
