×

குரூப் 2 மாதிரி தேர்வு 29 பேர் எழுதினர்

திருப்பூர்,மே16: திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ-வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 4வது தளத்தில் இயங்கி வரும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் உடுமலை எக்ஸ்டன்சன் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் நடந்து வருகிறது.

இங்கு 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் படித்து வருகிறார்கள். இந்நிலையில்,இந்த ஆண்டுக்கான குருப் 2 மற்றும் 2 ஏ முதன்மை தேர்வு வருகிற அக்டோபர் மாதம் 25ம் தேதி நடக்கிறது. இந்த தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வரும் நிலையில் மாதிரி தேர்வு உடுமலை எக்ஸ்டன்சன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்தது. இதில், 29 பேர் தேர்வு எழுதினர்.

 

Tags : Tiruppur ,Tiruppur District Employment and Career Guidance Center ,Employment and Career Guidance Center ,Tiruppur Collectorate ,
× RELATED பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்