திருப்பூர், மே 15: திருப்பூர், மங்கலம் ரோடு, ஜான் ஜோதி கார்டனை சேர்ந்தவர் கதிர் (32). இவரது மனைவி பிரதிபா (28). இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர்.கதிர் ஆன்லைன் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்து வந்தார். இந்நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் கதிர் பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனால், கதிர் கடந்த சில நாட்களாக மன அழுத்ததில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
