- பகிரி
- கோயம்புத்தூர்
- கோயம்புத்தூர் கார்ப்பரேஷன்
- ஆணையாளர்
- சிவகுரு பிரபாகரன்
- முதலமைச்சர்
- தமிழ்
- தமிழ்நாடு
- மேற்கு
- வடக்கு
- தெற்கு
- மத்திய
- கோவை மாநகராட்சி…
கோவை, மே 16: கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதல்வர் வழிகாட்டுதலின்படி, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய 5 மண்டலங்களுக்கு உட்பட்ட 100 வார்டுகளில் பொதுமக்களுக்கு குடிநீர், சாலைவசதி, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் பணி தொய்வின்றி நடந்து வருகிறது.
குறிப்பாக, தற்போதைய கோடைகாலத்தில் தங்கு தடையின்றி சீரான இடைவெளியில் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பழுதடைந்த ஆழ்துளை கிணறுகள் சீரமைக்கப்பட்டு, ஆழ்குழாய் தண்ணீர் விநியோகமும் சீராக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், பொதுமக்கள் தங்கள் பகுதியில் குடிநீர் விநியோகம் தொடர்பாக ஏதேனும் குறைகள் இருப்பின், 89258-40945 (கிழக்கு மண்டலம்), 89259-75981 (மேற்கு மண்டலம்), 89259-75980 (வடக்கு மண்டலம்), 90430-66114 (தெற்கு மண்டலம்), 89259-75982 (மத்திய மண்டலம்) ஆகிய வாட்ஸ்அப் எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். இப்புகார்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
