தொண்டாமுத்தூர், மே 16: கோவை அருகே பேரூர் சக்தி நகர் ஐஓபி காலனி சேர்ந்தவர் ஆனந்த் (32). இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். விடுமுறையை முன்னிட்டு மாமனார் வீட்டுக்கு காளப்பட்டிக்கு சென்று விட்டார். வீட்டில் சாவியை பக்கத்து வீட்டில் உறவினர்களிடம் கொடுத்து சென்றுள்ளார்.
இந்நிலையில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டுள்ளதாக ஆனந்த்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வீட்டில் சென்று பார்த்தபோது படுக்கை அறை பீரோவில் இருந்து 3 பவுன் நகை காணாமல் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதுகுறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
