×

திமுக முன்னாள் எம்எல்ஏ கோர்ட்டில் ஆஜர்

கோவை, மே 16: அதிமுக ஆட்சியில் கடந்த 2018ம் ஆண்டு சூலூர் கண்ணம்பாளையத்தில் குட்கா தயாரிப்பு ஆலை செயல்பட்டு வந்தது. இதனை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து அப்போதைய சிங்காநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. நா.கார்த்திக் உட்பட சிலர் மீது அதிமுக அரசு வழக்கு போட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை ஜே.எம்.1 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு விசாரணைக்காக நேற்று திமுக மாநில தீர்மான குழு செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான நா.கார்த்திக் ஆஜர் ஆனார். அப்போது பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் செல்வராஜ், தெற்கு மாவட்ட பிரதிநிதி மாதப்பூர் தங்கராஜ், ராவத்தூர் செல்வராஜ், பாப்பம்பட்டி பரமசிவம், மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அன்பு செழியன், வழக்கறிஞர்கள் மதிவாணன், ராஜமாணிக்கம், ஹேமந்த்குமார், குணசேகரன், ராஜன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

 

Tags : DMK MLA ,Coimbatore ,Sulur Kannampalayam ,AIADMK ,DMK ,Singanallur ,Na. Karthik ,
× RELATED கோவை கிழக்கு புறவழிச்சாலைக்கு ஆதரவு:...