- மானாமதுரை
- Karupanan
- குன்னத்தூர்
- மதுரை காளிமங்கலம்
- முட்டானெந்தல்
- மானாமதுரா
- இடியாகத்தூர் சர்விஸ் ரோட்
- மதுரா
மானாமதுரை, மே 15: மதுரை களிமங்கலம் குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பணன்(75). நேற்று இவர் மானாமதுரை அருகே முத்தனேந்தலில் ஒருவரை பார்க்க வந்துவிட்டு மதுரை செல்வதற்காக இடைக்காட்டூர் சர்வீஸ் சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது மதுரையில் இருந்து வந்த கார் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கருப்பணன் இறந்தார். புகாரின்பேரில் மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த டிரைவர் மதுரை பொன்மேனி மாடக்குளம் ரோட்டை சேர்ந்த சிவக்குமார் மகன் விஜய்(30) மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
