காரைக்கால், மே 15: காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் காரைக்கால் மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
இம்மாதத்திற்கான குறைதீர்ப்பு முகாம், 18.5.2026 (திங்கட்கிழமை) அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில், அனைத்து துறை அதிகாரிகள் முன்னிலையில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை நடைபெறுகிறது. எனவே, பொதுமக்கள் இந்த குறைதீர்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
