சீர்காழி, மே 15: சீர்காழியில் ஆதி ராகு ஸ்தலம் என்று அழைக்கப்படும் பரிகார ஸ்தலமாக விளங்கி வரும் நாகேஸ்வர முடையார் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் பழமையான ஆதி ராகு ஸ்தலம் என்று அழைக்கப்படும் பரிகார ஸ்தலமாக விளங்கும் பொன்னாக வள்ளி உடனாகிய நாகேஸ்வர முடையார் கோயில் உள்ளது.
நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு கோயிலில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயில் வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பக்தர்கள் செய்திருந்தனர்.
