×

புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது

 

உளுந்தூர்பேட்டை, மே 15: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே களமருதூர் காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சலாம் உசேன் தலைமையிலான போலீசார் காவல்நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிளியூர் கிராமத்தில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் மகேஸ்வரி(41) என்பவர் தனது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லிப், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது
தெரியவந்தது.
இதையடுத்து சுமார் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்த மகேஸ்வரியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Ulundurpettai ,Kalamarudur Police Station ,Sub ,Inspector ,Salam Hussain ,Kallakurichi district ,Kiliyur ,
× RELATED 110 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த 4 பேர் கைது