வேதாரண்யம், மே 14: நாகை, திருவாரூரில் புதிதாக துவங்கப்பட்டுள்ள டூர் ஸ்நாக்கரி எனும் சுற்றுலா தின்பண்டகம் நிறுவனம், பள்ளிக் குழந்தைகளுக்கான, வீட்டிலிருந்தே பங்கு கொள்ளும் கோடை விடுமுறை பொழுது போக்கு போட்டிகளை நடத்துகிறது. மாணவ மாணவிகளுக்கான இந்தப் போட்டியில், ‘நான் விரும்பும் தின்பண்டம்’ என்ற தலைப்பில் ஓவிய போட்டியும், புவிசார் குறியீடு பெற்ற தின்பண்டங்கள் தலைப்பில் கட்டுரைப் போட்டியும்,
சங்க காலம் முதல் ஜங்க் காலம் வரை தின்பண்டங்கள் தலைப்பில் கவிதைப் போட்டியும் நடத்துகிறது. மாணவர்களின் படைப்புகளை பெற்றோர்கள் அருகில் உள்ள டூர் ஸ்நாக்கரி சுற்றுலாத் தின்பண்டகங்களில் மே 31ம் தேதிக்கு முன்பாக அளிக்க வேண்டும். போட்டியில் பங்கு கொள்ளும் அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பில் பரிசு, சான்றிதழ் அளிக்கப்படும் என நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
