கருர், மே 14: கரூர் அமராவதி ஆற்றுப் பகுதியில் பக்தர்களின் வசதி்க்காக தற்காலிக கழிவறை வசதிகள் தயார் செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி விழாவுக்கான கம்பம் நடும் விழா கடந்த 10ம்தேதி நடைபெற்றது. இதனை முன்னி்டடு கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி மே 27ம்தேதி நடைபெறவுள்ளது.
அன்றயை தினம் கரூர் அமராவதி ஆற்றில் நடைபெறும் வான வேடிக்கை நிகழ்வின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். இவர்களின் வசதிக்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தற்காலிக கழிவறை வசதிகள் செய்யப்படுவது வழக்கம். அதனடிப்படையில், கரூர் அமராவதி ஆற்றங்கரையை ஒட்டியுள்ள பகுதியில் தற்காலிக கழிவறை வசதி மேற்கொள்ளும் பணியை பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
