×

திங்களூர்-மூலக்கடையில் முடிவுற்ற சாலைப்பணிகளை தணிக்கைக்குழுவினர் ஆய்வு

 

கோபி,மே 14: கோபி அருகே உள்ள திங்களூர்-மூலக்கடையில் முடிவுற்ற சாலைப்பணிகளை தணிக்கைக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
கோபி அருகே உள்ள திங்களூரில் இருந்து பிரப் நகர், பெரிய கவுண்டன் வலசு வழியாக மூலக்கடை செல்லும் சாலை மேம்பாட்டு பணிகள் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு திட்டம் 2025-26ன் கீழ் 1.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வந்தது. மாநிலம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை மூலமாக நடைபெற்று வரும் மற்றும் முடிவுற்ற பணிகளை துறை சார்ந்த அதிகாரிகளை கொண்ட குழு அமைத்து தரப்பரிசோதனை செய்து உள் தணிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி திங்களூர்-மூலக்கடை சாலை பணிகள் தற்போது முடிவுற்ற நிலையில் நிச்சாம்பாளையம் சந்திப்பில் சாலை ஓடுதளத்தின் தரம், சாலை பாதுகாப்பு அம்சம் குறித்து உள் தணிக்கை செய்ய கோவை திட்டங்கள் வட்ட கண்காணிப்பு பொறியாளர் ஜெயலட்சுமி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது கோபி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் குமரன், உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Thingalur-Moolakkadai ,Gopi ,Thingalur ,Moolakkadai ,Prab Nagar ,Periya Gaunton Valasu ,
× RELATED .2.10 கோடிக்கு கொப்பரை ஏலம்