ஈரோடு, மே 14: ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதோடு, ஆண்டுதோறும் 2 விழுக்காடு பதவிகளை குறைக்கும் கொள்கையைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி டிஆர்இயூ சார்பில் ஈரோடு ரயில் நிலைய வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய ரயில்வே நிர்வாகம் ஆண்டுதோறும் 2 விழுக்காடு ரயில்வே ஊழியர் பதவிகளை குறைக்கும் கொள்கையை கைவிட வேண்டும். இந்தியா முழுவதும் 29,608 பதவிகளை சரண்டர் செய்யும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டிஆர்இயூ கோட்ட உதவி செயலாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். உதவி பொதுச்செயலாளர் பிஜூ, ரயில் ஓட்டுநர் சங்க கோட்ட செயலாளர் அருண்குமார், டிஆர்இயூ கோட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் பேசினர். கோட்ட உதவி தலைவர் மதுரை வீரன் நன்றி கூறினார்.
