×

வேன் மோதி தொழிலாளி பலி

 

பெருந்துறை, மே 12: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மந்திரிபாளையத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (60). இவர் பெருந்துறை அருகே விஜயமங்கலம் டோல்கேட்டில் பாத்ரூம் சுத்தம் செய்யும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இவர் டோல்கேட் அருகே விஜயமங்கலம் பிரிவு பகுதியில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு சாலையை குறுக்கே கடக்க முயன்றபோது கோவை நோக்கி சென்று கொண்டிருந்த டூரிஸ்ட் வேன் தியாகராஜன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த தியாகராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து பெருந்துறை போலீசார், டூரிஸ்ட் வேன் டிரைவரான கோவை, இருகூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (38) என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Perundurai ,Thiagarajan ,Mandripalayam ,Palladam ,Tiruppur district ,Vijayamangalam tollgate ,Vijayamangalam ,
× RELATED .2.10 கோடிக்கு கொப்பரை ஏலம்