- முதல் அமைச்சர்
- சுவேந்து
- சிபிஐ
- புது தில்லி
- சுவேந்து அதிகாரி
- திரிணாமூல் காங்கிரஸ் கட்சி
- பாஜக
- மேற்கு வங்கம்
- திரிணாமூல் காங்கிரஸ்
- மம்தா பானர்ஜி
புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜவுக்கு தாவிய சுவேந்து அதிகாரி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்டு அவரை தோல்வியடைய செய்தார். தொடர்ந்து அவர் மேற்கு வங்கத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
முன்னதாக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் கடந்த 6ம் தேதி மத்தியம்கிராம் பகுதியில் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சந்திரநாத் ரத், காரில் சென்றபோது கொடூரமான முறையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதன் அடிப்படையில் உத்தரப்பிரதேசத்தில் இரண்டு பேரும் பீகாரில் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கை மாநில காவல்துறையிடம் இருந்து சிபிஐ ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளது. மாநில அரசின் கோரிக்கையை அடுத்து சிபிஐ இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. டெல்லியை சேர்ந்த சிறப்பு குற்றப்பிரிவு டிஐஜியின் தலைமையில் 7 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை சிபிஐ அமைத்துள்ளது.
