×

மின்னல் தாக்கி 7 ஆடுகள் பலி

சிவகங்கை, மே 12: இளையான்குடி அருகே மின்னல் தாக்கியதில் 7 செம்மறி ஆடுகள் பலியாகின.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே புக்குளம் கிராமம் உள்ளது. இங்கு காளையார் கோயில் அருகே காயாவோடை கிராமத்தைச் சேர்ந்த மலைச்சாமி என்பவர் நேற்று ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் திடீர் மின்னல் ஏற்பட்டது. மின்னல் தாக்கியதில் 7 ஆடுகளும் பரிதாபமாக பலியாகின. இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் கால்நடை துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆடுகளுக்கு அரசு சார்பில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கருப்பையா கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : SIVANGKA ,ILAYANKUDI ,Bukulam Village ,Ilayyankudi ,Sivaganga District ,Malichami ,Gayavoda village ,Bull Temple ,
× RELATED அரசு குடியிருப்பில் 10 கிலோ பதுக்கல்;...