சேலம்: சங்ககிரி அருகே நேற்றிரவு வாகனம் மோதி சிறுத்தை பலியானது. இதுபற்றி வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே நேற்று இரவு 10 மணியளவில், கோவை – சேலை தேசிய நெடுஞ்சாலையில் கலியனூர் பைபாஸ் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், கடந்த ஓராண்டாக போக்கு காட்டி வந்த ஆண் சிறுத்தை அடிபட்டு, சென்டர் மீடியன் பகுதியில் இறந்து கிடந்தது. இதைப்பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடம் வந்த வனத்துறையினர், இறந்துபோன ஆண் சிறுத்தை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
