சென்னை: முதலமைச்சராக விஜய் பதவியேற்பு விழாவில் 3வதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதற்கு விசிக, சிபிஎம், வைகோ மற்றும் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. முதலமமைச்சரின் பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து 3வதாக பாடப்பட்டது ஏற்புடையதல்ல என சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடாமல் வந்தேமாதரம் பாடப்பட்டது தமிழ்நாட்டின் மரபை மீறிய நிகழ்வு என வைகோ தெரிவித்துள்ளார். விஜய் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டது மரபு மீறிய செயல் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். பதவியேற்பு விழாவில் தமிழுக்கு 3வது இடமா? என விசிக கண்டனம் தெரிவித்துள்ளது.
