×

கருப்பண்ண சாமி சன்னிதியில் 1 சவரன் தங்க செயின் கண்டெடுப்பு: போலீசில் ஒப்படைத்தவர்களுக்கு பாராட்டு

 

செய்யாறு, மே 9:செய்யாறு ஐயப்பன் கோயில் வளாகத்தில் உள்ள கருப்பண்ணசாமி சன்னிதியில் கண்டெடுக்கப்பட்ட 1 சவரன் தங்க செயினை வாலிபர்கள் போலீசில் ஒப்படைத்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மேல்நெல்லி கிராமத்தை சேர்ந்தவர்கள் சிவசங்கரன்(40), ராஜ்குமார்(17), நதீன்பாஷா(18). இவர்கள் 3 பேரும், பல்வேறு ஊர்களில் உள்ள சிவாலயங்களுக்கு அடிக்கடி சென்று தரிசனம் செய்வார்களாம். அதேபோல் நேற்று முன்தினம் மாலை 3 பேரும், செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்தனர். பின்னர் கோயில் அருகே வந்தவாசி சாலையில் புதிதாக கட்டப்பட்ட ஐயப்பசுவாமி ேகாயிலில் தரிசனம் செய்தனர். பின்னர் அதே வளாகத்தில் உள்ள கருப்பண்ணசாமி சன்னதிக்கு சென்று தரிசனம் செய்தனர்

 

Tags : Karuppanna Swamy shrine ,Cheyyar ,Seyyar Ayyappan ,Sivasankaran ,Rajkumar ,Nadine Pasha ,Melnelli village ,Ranipet ,
× RELATED திருவண்ணாமலை மாநகராட்சி நகர்புற...