- கருப்பண்ணா சுவாமி ஆலயம்
- செய்யாறு
- செய்யர் அய்யப்பன்
- சிவசங்கரன்
- ராஜ்குமார்
- நதின் பாஷா
- மெல்நெல்லி கிராமம்
- ராணிப்பேட்டை
செய்யாறு, மே 9:செய்யாறு ஐயப்பன் கோயில் வளாகத்தில் உள்ள கருப்பண்ணசாமி சன்னிதியில் கண்டெடுக்கப்பட்ட 1 சவரன் தங்க செயினை வாலிபர்கள் போலீசில் ஒப்படைத்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மேல்நெல்லி கிராமத்தை சேர்ந்தவர்கள் சிவசங்கரன்(40), ராஜ்குமார்(17), நதீன்பாஷா(18). இவர்கள் 3 பேரும், பல்வேறு ஊர்களில் உள்ள சிவாலயங்களுக்கு அடிக்கடி சென்று தரிசனம் செய்வார்களாம். அதேபோல் நேற்று முன்தினம் மாலை 3 பேரும், செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்தனர். பின்னர் கோயில் அருகே வந்தவாசி சாலையில் புதிதாக கட்டப்பட்ட ஐயப்பசுவாமி ேகாயிலில் தரிசனம் செய்தனர். பின்னர் அதே வளாகத்தில் உள்ள கருப்பண்ணசாமி சன்னதிக்கு சென்று தரிசனம் செய்தனர்
